January 10, 2018
tamil.samayam.com
புரோ மல்யுத்த லீக் போட்டியில் சாக்ஷி மாலிக் தலைமையிலான மும்பை அணி டெல்லி அணியை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது.
புரோ மல்யுத்த லீக் தொடரின் 3வது சீசன் நேற்று டெல்லியிலுள்ள சிரி ஃபோர்ட் ஸ்போர்ட்ஸ் காம்பளக்சில் துவங்கியது. ஆறு அணிகள் பங்குபெறும் இந்த லீக் போட்டியில் முதலில் மும்பை மகாராத்தி அணியிம், டெல்லி சுல்தான்ஸ் அணியும் மோதின. இதன் முதல் 4 போட்டிகள் முடிவில் இரு அணிகளும், 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் பெற்று 2-2 என்று சமநிலையில் இருந்தன.
இதையடுத்து, நடந்த 125 கி.கி. எடைப்பிரிவில் மும்பை அணியின் சதேந்தர் மாலிக் 7-6 என்று வெற்றி பெற்றார். அடுத்து நடந்த 62 கி.கி. எடைப்பிரிவில் மும்பை மகாராத்தி அணியின் கேப்டன் சாக்ஷி மாலிக், டெல்லி சுல்தான் அணியின் மோனிகாவை 18-2 என்று வெற்றி பெற்றார். கடைசி போட்டி முடிவில் மும்பையின் ராமோனவ் வெற்றி பெற, இறுதியில் மும்பை அணி 5-2 என்ற கணக்கில் டெல்லி அணியை தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.