• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரோ மல்யுத்த லீக் போட்டி: சாக்ஷி மாலிக் தலைமையிலான மும்பை அணி வெற்றி!

January 10, 2018 tamil.samayam.com

புரோ மல்யுத்த லீக் போட்டியில் சாக்ஷி மாலிக் தலைமையிலான மும்பை அணி டெல்லி அணியை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது.

புரோ மல்யுத்த லீக் தொடரின் 3வது சீசன் நேற்று டெல்லியிலுள்ள சிரி ஃபோர்ட் ஸ்போர்ட்ஸ் காம்பளக்சில் துவங்கியது. ஆறு அணிகள் பங்குபெறும் இந்த லீக் போட்டியில் முதலில் மும்பை மகாராத்தி அணியிம், டெல்லி சுல்தான்ஸ் அணியும் மோதின. இதன் முதல் 4 போட்டிகள் முடிவில் இரு அணிகளும், 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் பெற்று 2-2 என்று சமநிலையில் இருந்தன.

இதையடுத்து, நடந்த 125 கி.கி. எடைப்பிரிவில் மும்பை அணியின் சதேந்தர் மாலிக் 7-6 என்று வெற்றி பெற்றார். அடுத்து நடந்த 62 கி.கி. எடைப்பிரிவில் மும்பை மகாராத்தி அணியின் கேப்டன் சாக்ஷி மாலிக், டெல்லி சுல்தான் அணியின் மோனிகாவை 18-2 என்று வெற்றி பெற்றார். கடைசி போட்டி முடிவில் மும்பையின் ராமோனவ் வெற்றி பெற, இறுதியில் மும்பை அணி 5-2 என்ற கணக்கில் டெல்லி அணியை தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க