• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பருவமழை தீவிரம் நீர் வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு. மாற்று இடம் தேடும் சுற்றுலாப் பயணிகள்.

July 13, 2016 வெங்கி சதீஷ்

கடந்த சில தினங்களாகத் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கோவை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள முக்கிய அருவிகளில் வெள்ளம் வருவதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்துள்ளது. கடந்த பத்து நாட்களாகக் கேரளா உள்ளிட்ட வனப்பகுதிகளில் பலத்த மலை பெய்துவருகிறது.

இதையடுத்து கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள நீர்வீழ்ச்சிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் அருகில் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடந்த மூன்று நாட்களாக மன்கி பால்ஸ் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கவும் அருகில் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவைக் குற்றாலம், மூணாறு நீர்வீழ்ச்சி ஆகியவற்றிலும் நீர் அதிகளவு வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர். எனவே கோவையை மையமாக வைத்து சுற்றுலா செல்பவர்கள் தற்போது தங்களது திட்டங்களில் இருந்து நீர் வீழ்ச்சிகளைத் தவிர்த்து வருகின்றனர். இதற்குப் பதிலாக வனப்பகுதியில் உள்ள அமைதியான குடில்கள், தனி காட்டேஜ்கள் ஆகியவற்றை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

அதன்மூலம் வன விலங்குகளை அருகில் பார்த்து புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு அமையும் எனவும், அமைதியான சூழல் என்பதால் மன அமைதி கிடைக்கும் எனவும் நினைக்கிறார்கள். இது குறித்து சுற்றுலா அமைப்பாளர் அகமது கவுஸ் கூறும்போது, கோவையைப் பொறுத்தவரை சுற்றுலா பேக்கேஜ் என்பது அருகில் உள்ள நீர் வீழ்ச்சிகளையும் சேர்த்துத்தான் அமையும். ஆனால் தற்போது கடந்த சில நாட்களாகவே வாடிக்கையாளர்கள் நீர்வீழ்ச்சிகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

அவற்றிற்குப் பதிலாக வனப்பகுதிகளையும் வனவிலங்கு சரணாலயங்களையும் விரும்பிக் கேட்கின்றனர். எனவே ஏற்கனவே பதிவு செய்த பல பேக்கேஜ்களையும் மாற்றியமைத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க