• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விருதுநகர் அருகே முடி திருடிய நபர் கைது

July 14, 2016 வெங்கி சதீஷ்

நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கு இதுல முடியத் திருடினது எல்லாம் ஒரு பிரச்சனையா என தலைப்பைப் பார்த்து சிரிக்கும் நபர்கள் கீழே உள்ள மேட்டரைப் படித்தால் தான் கைது எதற்கு எனப் புரியும்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோவில் சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் முடிக் காணிக்கை கொடுப்பதாகக் கூறி ஏதேனும் கோரிக்கை வைத்தால் அந்தக் காரியம் உடனடியாக கைகூடும் என்பது ஐதீகம். இதனால் சுற்றுவட்டாரப் பகுதி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இதனால் அங்கு பக்தர்கள் தரும் முடிக் காணிக்கையை மூட்டை மூட்டையாகக் கட்டி பின்னர் விக் தயாரிக்கும் நிறுவனங்களுக்குக் கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில் சமீபமாக நிர்வாகக்குழுவில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நடைபெற்ற தணிக்கையின் பொது பழைய முடி மூட்டைகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நிர்வாகக் குழுவினர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய இருக்கன்குடி காவல்துறையினர் சுமார் 50 லட்சம் மதிப்பிலான காணிக்கை முடி மூடைகள் திருடப்பட்டதை கண்டுபிடித்தனர்.

மேலும் அதற்கு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் முன்னாள் பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி தான் காரணம் என்பதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து அது குறித்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் நேற்று ராமமூர்த்தியை கைது செய்துள்ளனர்.

மைன்ட் வாய்ஸ்: முடிதானேனு நினைச்சா 50 லட்சம் ரூபாய்க்கு திருடியிருந்தா சும்மாவா விடும் போலீஸ்.

மேலும் படிக்க