• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘தளபதி 62’ க்கு மட்டும் சிறப்பு அனுமதியா?கடுப்பில் இயக்குனர்கள்

March 20, 2018 தண்டோரா குழு

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான  ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்,இப்படத்தில்  விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், ராதாரவி, பழ.கருப்பையா,வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் த இந்த படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய படக்குழு  திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் சில கோரிக்கைகளை முன் வைத்து திரைப்பட பணிகளை நிறுத்துமாறு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது. இதனால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்தானது.

இந்நிலையில், ‘தளபதி 62’ டீம் 2 நாட்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி பெற்று  சென்னையில் ஷூட்டிங் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விஜய்62 படக்குழு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க