• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தல அஜீத் சொன்ன அந்த ஒரு வார்த்தையில்  நெகிழ்ந்த மாணவர்கள்

March 26, 2018 தண்டோரா குழு

தல அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது தயாரிப்பாளர் பிரச்சனை காரணமாக படபிடிப்புகள் ரத்து செய்யபட்டுள்ளன. இதற்கடையில், தல அஜித் தனது நீண்ட நாள் ஆர்வமான ஏரோ மாடலிங்கில் பற்றி அறிய முடிவு செய்தார்.    அதற்கான பிரத்யேக தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ள சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு சென்றுள்ளார். அங்கு ஏரோ மாடலிங் துறையை சேர்ந்த மாணவர்களிடம், தனது சந்தேகங்களை கேட்டறிந்த அஜித், அக்கல்லூரியில் அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்த மாணவர்களை சந்தித்தார்.

அப்போது அஜித்தை சந்தித்த மாணவர்கள், 12 மணி நேரம் உங்களுக்காக காத்திருக்கிறோம் என்று கூற, அதற்கு அஜித் “சாரி..பா உங்களை பார்க்க நான் 26 வருடமாய் காத்திருக்கிறேன்” எனக் கூற அங்குள்ள மாணவர்களை நெகிழவைத்துள்ளது. அப்போது அந்த மாணவர்கள் அஜீத்துடன் நின்று புகைபடம் எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில்,  அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட அவர்கள்,

தாங்கள் ஒரு விஜய் ரசிகர்கள் எனவும், அந்த இரவுநேரத்தில் மிகச்சோர்வாக இருந்த அவர் எங்களுடன் கைக்குலுக்கி, புகைப்படம் எடுத்துக் கொண்டு எங்களிடம் எளிமையாக நடந்துக் கொண்டது அவரின் சாந்தகுணத்தை காட்டுவதாக கூறியுள்ளனர்.

தற்போது அந்த புகைபடம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க