• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜபாங்கை வாங்கியது ப்ளிப்கார்ட்

July 28, 2016 தண்டோரா குழு

ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் ஒரு பிரிவான மிந்திரா நிறுவனம் சுமார் 470 கோடி ரூபாய்க்கு ஜபாங் நிறுவனத்தை வாங்கி உள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் பேஷன் பிரிவில் பிரபலமானவை என்பது அனைவரும் அறிந்ததே.

ஜபாங் நிறுவனம் குளோபல் பேஷன் குரூப் குழுமத்தைச் சார்ந்தது. கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில் சுமார் 12.6 கோடி யூரோ வருமானத்தை ஜபாங் ஈட்டியுள்ளது. குளோபல் பேஷன் குரூப்பின் வருமானத்தில் ஜபாங்கின் பங்கு சுமார் 13 சதவீதமாகும்.

ஜபாங்கை விற்கும் முயற்சி கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நடந்து உள்ளது. ஸ்நாப்டீல், பியூச்சர் குரூப், ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் ஜபாங் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் போட்டி போட்டது. ஆனால் இறுதியில் ப்ளிப்கார்டின் மிந்திரா நிறுவனம் வாங்கியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு பிளிப் கார்ட் நிறுவனம் மிந்திராவை வாங்கியது. இந்த இணைப்பின் மதிப்பு சுமார் 2,000 கோடி ரூபாய் ஆகும். இப்போது ஜபாங் நிறுவனத்தை மிந்த்ரா வாங்கியுள்ளது. பேஷன் மற்றும் லைப் ஸ்டைல் ஆகியவை இந்திய இ-காமர்ஸ் துறையின் முக்கியமான அம்சமாகும்.

இந்தப் பிரிவில் நல்ல வளர்ச்சி இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் என்று பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பின்னி பன்சால் கூறினார். மேலும், மிந்திரா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் நாராயணன் இதைக்குறித்துப் பேசும் போது, இப்போதைக்கு மிந்திரா மற்றும் ஜபாங் ஆகிய நிறுவனங்களை இணைக்கும் திட்டம் இல்லை என்றும் ஜபாங் தனது சிறப்பம்சங்களுடன் தொடர்ந்து செயல்படும் என்றும் சில குறிப்பிட்ட நகரங்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஜபாங் சிறப்பாக செயல்படும். மேலும், மாதம் 40 லட்சம் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள் மற்றும் சர்வதேச பிராண்ட்கள் விற்கப்படுகிறது. இப்போதைக்கு இரு நிறுவனங்களின் வர்த்தகத்தையும் தனித்தனியே வளர்ப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறோம் என்று கூறினார்.

ஜபாங் நிறுவனம் 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குளோபல் பேஷன் குழுமத்துடன் இணைக்கப்பட்டது. ஸ்வீடனைச் சேர்ந்த கினெவிக் நிறுவனம் குளோபல் பேஷன் குழுமத்தின் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ளது.

ஆன்லைன் பேஷன் துறையில் டாடா கிளிக், ரிலையன்ஸ் அஜியோ, ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த ஏபிஓஎப் ஆகிய நிறுவனங்கள் களம் இறங்கி இருப்பதால் இந்தத் துறையில் அதிகரிக்கும் போட்டி காரணமாகச் சந்தையை தக்கவைத்துள்ள ஜபாங் நிறுவனத்தை மிந்திரா வாங்கி இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கத்தின் கணிப்புப்படி இடெய்ல் துறை ஒவ்வொரு வருடமும் 57 சதவீதம் உயர்ந்து வருகிறது. 2015 டிசம்பரில் இடெய்ல் வர்த்தகம் சுமார் 37,689 கோடி ரூபாயாக இருந்தது. இந்த வருட டிசம்பரில் 72,639 கோடி ரூபாயாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க