March 30, 2018
தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங் இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடவுள்ளார்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் ஹர்பஜன் சிங் அவ்வப்போது தமிழில் டுவிட் செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார்.
தற்போது,
“தமிழ்நாட்டுக்கு வருகை தந்த நாளில் இருந்து தமிழ் மக்கள் என் மேல் காட்டும் அளவு கடந்த பாசமும்,நேசமும் என்னை வியக்கவைக்கிறது உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை ஏற்று கொண்டமைக்கு நன்றி.அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே.இந்த பந்தம் தொட்டு தொடரும் ஒரு பட்டு பாரம்பரியமாக தொடரட்டும்”. என்று பதிவிட்டுள்ளார்.