• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவில்

April 10, 2018 findmytemple.com

சுவாமி : ஸ்ரீ ஐய்யனார்.

அம்பாள் : பூர்ணாதேவி, புஸ்கலாதேவி.

தலச்சிறப்பு : தாருகாவனத்தில் இருந்த மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக சிவபெருமான் பிட்சாடனர் உருவமும், விஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீடுகளுக்கு சென்று பிச்சை கேட்டார். சிவபெருமானின் தோற்றத்தைக் கண்ட மகரிஷிகளின் பத்தினிகளுக்கு மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. அதே போல் மோகினி ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று ரிஷிகளின் மனதிலும் தடுமாற்றத்தை ஏற்படுத்தினார். இதனால் வேள்வி தடைபட்டது. அப்பொழுது மோகினி உருவத்தின் மீது சிவபெருமான் காதல் கொண்டதால், கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐய்யனார் அல்லது சாஸ்தா என அழைக்கப்படுகிறார்.

ஐய்யனார் மாசி மாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார். ஐய்யனாருக்குப் பூர்ணாதேவி, புஸ்கலாதேவி என இரண்டு தேவிகள் உள்ளனர், ஐய்யனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர். ஆனால் பூலோகத்தில் அவதரித்தவர். எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஸ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக உள்ளனர்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோவில் முகவரி : அருள்மிகு ஐய்யனார் திருக்கோவில்,

குறிச்சி கிராமம், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க