• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெல்லி அணி கேப்டன் பொறுப்பிலிருந்து காம்பீர் விலகல்!

April 25, 2018 தண்டோரா குழு

ஐபிஎல் போட்டிகளில் தொடர் தோல்வி காரணமாக டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் காம்பீர் விலகியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 7-ம் தேதி மும்பையில் தொடங்கியது.இதில் சென்னை, டெல்லி,மும்பை,ஐதராபாத்,கொல்கத்தா,பஞ்சாப்,பெங்களூரு,ராஜஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளனர்.இதில்,மும்பை,டெல்லி அணிகள் இதுவரை விளையாடியுள்ள ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன.இதனால் இரு அணி ரசிகர்களும் விரக்தியில் உள்ளனர்.

இந்நிலையில்,கொல்கத்தா அணியில் கேப்டனாக இருந்து 2 முறை கோப்பையை வென்ற காம்பீரை இம்முறை டெல்லி அணி வாங்கி,அந்த அணிக்கு கேப்டனாக நியமனம் செய்தது.தற்போது அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் கவுதம் காம்பீர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து டெல்லி அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணி 27-ம் தேதி நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க