May 3, 2018
tamilsamyam.com
ஐபிஎல் அரங்கில் பெங்களூரு அணி கேப்டன் கிங் கோலி,விசித்திரமான சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது.இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில்,பெங்களூருவில் நடந்த 31வது லீக் போட்டியில், ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியை விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கோலி தலைமையிலான பெங்களூரு அணி வழக்கத்தைவிட சின்னசாமி மைதானத்தில் குறைவான ரன்கள் எடுத்த போது, சூப்பரான பவுலிங்கால் வெற்றி பெற்றது. இது கேப்டன் கோலி, தனது மனைவி அனுஷ்காவின் பிறந்தநாளில் அவருக்கு அளித்த மிகச்சிறந்த பரிசாக அமைந்தது.
இந்நிலையில்,கோலி இந்த ஆண்டுக்கான ஐபிஎல்., தொடரில் 22 யார்டு கொண்ட் ஆடுகளத்தில் அதிக ஒரு ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமை பெற்றார்.