• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படத்தில் நடிக்கும் நடிகை அஞ்சலி

May 21, 2018 தண்டோரா குழு

விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்திற்கு பிறகு நடிகை அஞ்சலியின் கைவசம் மம்மூட்டியின் ‘பேரன்பு’, சசிகுமாரின் ‘நாடோடிகள் 2’, விஜய் சேதுபதி படம் என அடுத்தடுத்து படங்கள் உள்ளன.

அடுத்ததாக விஜய் சேதுபதி ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க அஞ்சலி கமிட்டாகியுள்ளார். லிசா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘PG மீடியா வொர்க்ஸ்’ நிறுவனம் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிக்கவுள்ளார்.

திகில் கலந்த த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கவுள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கும் இந்த ஹாரர் படத்தை Helium 8K கேமரா மூலம் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். இது இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘விரைவில் படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க