May 22, 2018
tamilsamayam.com
விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவை போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளார்.
குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவி ரிபாவா ஜடேஜா காரில் சென்றுள்ளார்.அப்போது அவரது கார் எதிரே வந்த கான்ஸ்டபிள் சஞ்ஜய் அஹிர்,இரு சக்கர வாகனத்தில் மோதியுள்ளது.
உடனே காரை நிறுத்திய ரிவாபாவை, அஹிர் தாக்கியுள்ளார். இதில் ரிவாபாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரிவாபா அளித்த புகாரின் அடிப்படையில் அஹிர் மீது நடவரிக்கை எடுக்கப்படும் என ஜாம்நகர் போலீஸ் எஸ்.ஐ., தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘ பெண்களை தாக்கியது மிகப்பெரிய குற்றம். அதன் அடிப்படையில் அந்த கான்ஸ்டபிள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. அஹிர் மீது துறை விசாரணை நடத்தப்படும். அதன் பின் அவர் தண்டிக்கப்படுவார்.’ என்றார்.