May 29, 2018
tamilsamayam.com
லண்டன் லாட்ஸ் மைதானத்தில் உலக அணிக்கும்,வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையே டி20 கிரிக்கெட் போட்டி வரும் மே 31ம் தேதி நடைப்பெற உள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் விதமாக உலக XI அணியும்,மேற்கிந்திய அணியும் ஒரே ஒரு போட்டி கொண்ட டி20 போட்டியில் விளையாட உள்ளது.
இங்கிலாந்தின் லண்டனில் உள்ள லாட்ஸ் மைதானத்தில் நடைப்பெறும் இந்த போட்டியில் இந்தியா சார்பாக ஆல்ரவுண்டர் விளையாடுவதாக இருந்தது.ஆனால் அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால்,அவருக்கு ஓய்வு தேவை என மருத்துவ குழு தெரிவித்ததை தொடர்ந்து இந்தியா வேகப்பந்து வீச்சாளர் உலக அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
அதே போல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கும் உலக அணியில் இடம்பெற்றுள்ளார்.இந்த போட்டியில் இங்கிலாந்து,இந்தியா,நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணியிலிருந்து தலா இரு வீரர்களும்,ஆப்கானிஸ்தான்,வங்கதேசம்,நேபாளம்,இலங்கை ஆகிய அணிகளிலிருந்து ஒரு வீரர்களும் என மொத்தம் 12 வீரர்கள் இடம்பெறுகின்றனர்.
இங்கிலாந்து அணி சார்பாக ஆடில் ரசித் சேர்க்கப்பட்டுள்ளார்.மேலும் இயான் மார்கன் உலக அணிக்கு கேப்டனாக செயல்படுவார்.