• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மழை வெள்ளத்தில் காணாமல் போன 22 பேர் சடலங்கள் மீட்பு

August 5, 2016 தண்டோரா குழு

மும்பையில் மூன்றாவது நாளாக இன்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிவருகிறது.கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாகியுள்ளன. சில விமானங்கள் சுற்றிச்செல்லவும், ஒரு விமானம் திருப்பியும் விடப்பட்டுள்ளது.

இதனால் மும்பையில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ரயில் போக்குவரத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கனமழை காரணமாக மால்ஜி ரத்தோவு சவுக், பிபிடி காலனி, சியோன், கிங் சர்கிள், ஹிந்த் மாதா, பிரதிக்ஷா நகர் மற்றும் நேஷனல் கல்லூரி பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பந்தராவில் உள்ள லீலாவதி மருத்துவமனை பகுதிகள், மேற்கு எக்ஸ்பிரஸ் சாலை, கிழக்கு பிரிவே, தாதர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, மும்பை – கோவா இடையிலான பாலம் இடிந்து விழுந்தது தெரியாமல் சென்று ஆற்றுக்குள் விழுந்த பேருந்தைத் தேடும் பணி 3வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்றது. இந்தச் சூழ்நிலையில், தேடும் பணியை பார்வையிடச் சென்ற அமைச்சர் பிரகாஷ் மேத்தா, செல்பி எடுத்துக் கொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனிடையே மும்பை கோவா மஹத் பாலம் இடிந்த போது வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து 22 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும், அவர்களில் 21 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஷீத்தல் உகாலே தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க