• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் டெல்லியில் தலைதூக்கும் பாலியல் வன்முறைகள்

August 6, 2016 தண்டோரா குழு

டெல்லியில் 3 வாலிபர்கள் நேபாளத்தைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவரைப் பிறந்த நாள் விழாவில் பலாத்காரம் செய்து, கழிவறையில் பூட்டி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.இந்தியாவின் தலைநகரான டெல்லி கடந்த சில வருடங்களாகவே குற்றங்களின் தலைநகராக மாறிவருகிறது.

குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.கடந்த சில மாதங்களாக அது போன்ற எந்த நிகழ்வும் இல்லாத சமயத்தில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கிழக்கு டெல்லியில் உள்ள அசோக் நகரில் தங்கி வேலை தேடி வந்துள்ளார். அவருக்கு அந்தப் பகுதியை சேர்ந்த யோகேஷ் என்ற இளைஞர் பழக்கமாகி வேலை தேடி தருவதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை யோகேஷின் பிறந்த நாள் என்பதால் அவரை தன்னுடைய பிளாட்டிற்கு அழைத்துள்ளார் அந்த இளம்பெண்.

யோகேஷ் தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் அந்த இளம் பெண்ணின் பிளாட்டிற்கு சென்றுள்ளார். அமித் மற்றும் ஷாலி என்ற தன்னுடைய நண்பர்களுடன் சென்ற யோகேஷ் அந்தப் பெண்ணை தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு வற்புறுத்தி மது அருந்த வைத்துள்ளார்.

பின்னர் அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து அந்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்து கழிவறையில் அவரைப் பூட்டி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அருகில் உள்ளவர்களின் உதவியுடன் வெளியே வந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.வழக்குப் பதிவு செய்த காவல்துறை, அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பலாத்காரம் செய்த வாலிபர்களில் அமித்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க