• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செல்பிக்கு 5 ஆண்டு சிறை. ரயில்வே துறை அதிரடி உத்தரவு

August 6, 2016 தண்டோரா குழு

ரயிலின் முன்பு செல்பி எடுக்கும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக் கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்க ரயில்வே துறை முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் செல்பியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் பாதி இந்தியாவில்தான் உள்ளது. குறிப்பாக ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுக்கும்போது எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யாமல் எடுப்பதே இந்த உயிரிழப்பிற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரயிலில் செல்லும்போது, ரயில் நிலையங்களில் செல்பி எடுத்து அதே ரயிலில் அடிபட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ரயில்வே நிர்வாகம் இதற்கு ஒரு முடிவுகட்டவேண்டும் என நினைத்து செல்பி எடுப்பதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலின் முன் செல்பி எடுப்பவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 142 (தொந்தரவு செய்தல்), 147 (பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறல்) மற்றும் 153 (பயணிகளுக்கு அச்சுறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க ரயில்வே காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.குறிப்பாக 153வது பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப் படுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க