June 7, 2018
tamilsamayam.com
பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவுக்கு எதிரான 7வது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார்.
நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது.ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் முன்னணி வீரர்களான ‘டாப்- 10’ வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் ஏழாவது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்,பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவை எதிர்கொண்டார்.இப்போட்டியின் 40-வது நகர்த்துதலின் போது மேக்ஸ்மி தோல்வியை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து ஆனந்த் 1 புள்ளி பெற்றார்.இதன் மூலம் இதுவரை 6 போட்டியில் பங்கேற்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த்,3.5 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார்.அமெரிக்காவின் வீஸ்லி சோ (3.5 புள்ளிகள்),நார்வேவின் கார்ல்சன் (3.5 புள்ளிகள்),அர்மேனியாவின் லெவான் அரோனியன் (3.5 புள்ளிகள்) ஆகியோர் ‘டாப்-3’ இடங்களில் உள்ளனர்.