• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மெக்ஸிகோ நிலச்சரிவில் சிக்கி 38 பேர் பலி

August 8, 2016 தண்டோரா குழு

தென் அமெரிக்காவில் உள்ள மெக்ஸிகோ தேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சுமார் 38 பேர் பலியாகி உள்ளனர்.கிழக்கு மெக்சிகோவில் உள்ள பியூப்லா என்னும் நகரில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சுமார் 15 குழந்தைகள் உட்பட 28 பேர் சிக்கி பலியாகி உள்ளனர்.

அதே போல், அந்நாட்டில் உள்ள வெராகுரூஸ் நகரிலும் ஏற்பட்ட நிலச்சரிவிலும் சுமார் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இதனால் பல பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

அங்குக் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இரு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.அதுமட்டுமின்றி 200க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கரிப்பியன் நாடுகளில் ஏற்பட்ட இந்தப் புயல் பெலிசே நகரைக் கடந்த புதன்கிழமையன்று தாக்கியுள்ளது.

இப்புயல் அதிகமாக வலுவடைந்து நேற்றைய தினம் மெக்ஸிகோ மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களைக் கடுமையாக தாக்கியதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜாவியர் என்று பெயரிடப்பட்ட இந்தப் புயல் தென்மேற்கு மெக்ஸிகோ நகர்களுக்கு அதிக மலையும் பலத்த காற்றும் கொண்டுவரக்கூடும் என்றும் ஐக்கிய அமெரிக்க வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

மக்கள் இந்தச் சம்பவத்தால் தாங்கள் வீடுகளை இழந்து விட்டனர். அதனால் அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று அந்நாட்டின் ஆளுநர் ராப்கேல் மொரேனோ வாலே தெரிவித்ததோடு அந்தப் பகுதிகளில் சிக்கித் தவித்த மக்களுக்குத் தான் செய்த பணிகளின் புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க