June 13, 2018
tamilsamayam.com
கிரிக்கெட் தான் வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு மகள் ஜிவா தான் மனிதனாக மாற்றியுள்ளார் என தல தோனி தெரிவித்துள்ளார்.
தோனி இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது.இப்படி ஒரு வீரர் தங்கள் அணிக்கு கிடைக்கவில்லையே என பல நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பொறாமைபடும் அளவுக்கு திறமைமிக்கவராக உள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி கோப்பையை வென்றது. பரிசளிப்பு விழாவின் போது மற்ற வீரர்கள் வெற்றி கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் தல தோனியோ தன் மகள் ஜிவாவுடன் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார்.
தோனி கூறியதாவது;
“என்னை மனிதானாக என் மகள் ஜிவா மாற்றியுள்ளார்.ஜிவா பிறப்பதற்கு முன்னர் நான் பெரும்பாலான நாட்கள் கிரிக்கெட் விளையாடுவதிலேயே கழித்து வந்தேன்.வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும் நிலை ஏற்படுவதால் குடும்பத்துடன் நேரத்தை செலவிடமுடியாமல் இருந்தேன்.ஒரு மகள் எப்போதும் தன் தந்தையுடன் மிக அன்பாக இருப்பது இயல்புதான்.அதே போன்று என் மகளும் உள்ளார்.
ஐபிஎல் போட்டி தொடர் முழுவதும் ஜிவா என்னுடன் இருந்தார்.போட்டிக்கு முன்னும்,பின்னும் மைதானத்தில் புல் தரையில் என்னுடன் விளையாட, மைதான பாதுகாவலர்களிடம் அனுமதி கோரினேன். மேலும் எங்கள் அணியில் நிறைய வீரர்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர்.அவர்கள் ஒன்றாக விளையாடுவதைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக இருந்தது”.என தெரிவித்துள்ளார்.