June 15, 2018
தண்டோரா குழு
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் பாரம்பரிய ஆடைகளுடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரம்ஜான் கொண்டாடினார்கள்.
இந்திய ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் அதிரடியாக விளையாடி சதம் அடித்தனர்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில்,இரண்டாவது நாள் போட்டி தொடங்குவதற்கு முன்பு ரம்ஜானை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் வீரர்கள் தங்களது பாரம்பரிய உடையான குர்தா அணிந்து மைதானத்திற்குள் வந்தனர்.அப்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஒருவருக்கு ஒருவரை கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.