• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு மாதமாக வசூலில் ஈடுபட்ட போலி ஆர்.டி.ஓ கைது

August 10, 2016 தண்டோரா குழு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராபட்டு தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி மோட்டார் வாகன சோதனை நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துவந்தது. இந்நிலையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர் நேற்று இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் வாகன ஆய்வாளர் என்று கூறி வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் வசூலித்துக் கொண்டு இருந்த நபரைக் கைது செய்தனர்.

பின்னர் விசாரணையில் அவர் திருப்பத்தூர் கந்திலி பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பது தெரியவந்தது. ஆனால் அவருடன் வந்த ஓட்டுனர் தப்பியோடிவிட்டார் என ஆம்பூர் கிராமிய போலிசார் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் பயன்படுத்திய வாகன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் விசாரணையில் அவர்கள் கடந்த 1 மாதமாக RTO என்று கூறி வசூலித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க