June 30, 2018
தண்டோரா குழு
பாலா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படம் அவன்-இவன். ஆா்யா, விஷால் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை தவறாக சித்தரித்ததாக படம் வெளியானபோதே சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நடுவா் நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணைக்காக நடிகா் ஆா்யா மற்றும் இயக்குநா் பாலா ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் அவா்கள் ஆஜராகவில்லை.
பின்னர், பல்வேறு காலகட்டங்களில் நடந்த விசாரணையின்போது ஆஜராகுமாறு உத்தரவிட்டும் அவர்கள் நேரில் ஆஜராகவில்லை. இந்நிலையில், நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா ஆகியோருக்கு எதிராக அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.