• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சேலம் அருகே முத்தூட் மினி வங்கியில் 730 சவரன் நகை கொள்ளை

August 16, 2016 தண்டோரா குழு

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லியில் கேரள மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் மினி வங்கி என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு நகைக்கடன் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த வங்கி நேற்றும் நேற்று முன்தினமும் விடுமுறை என்பதால் பூட்டியிருந்தது. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வங்கியின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே சென்று அடமானம் வைக்கப்பட்டிருந்த சுமார் 730 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பின்னர் காலை தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆத்தூர் டி.எஸ்.பி நமச்சிவாயம், சங்ககிரி டி.எஸ்.பி கந்தசாமி, வாழப்பாடி டி.எஸ்.பி சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

மேலும் படிக்க