July 30, 2018
தண்டோரா குழு
மகளிர் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வரும் மகளிருக்கான சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தொடரில் இந்திய கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா வெஸ்டர்ன் ஸ்டோர்ம் என்ற அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இந்த தொடரின் 9 வது லீக் போட்டி நேற்று (ஜூலை 29) நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணி ,லாபோரா லைட்னிங் அணியை எதிர்கொண்டது. அப்போது, மழை குறிக்கிட்டதால் இந்த போட்டி 6 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இந்த வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஸ்ம்ரிதி மந்தனா 18 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
இதன் மூலம் நியூசிலாந்தின் சோப்பி டெவைனின் (Sophie Devine) சாதனையை சமன் செய்துள்ளார். பின்னர் களமிறங்கிய , லாபோரா லைட்னிங் விக்கெட் இழப்பின்றி 67 ரன்களை மட்டுமே குவித்தது.
இதன் மூலம் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணியில் சிறப்பாக விளையாடியா இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மந்தனாவிற்கு ஆட்டநாகன் விருதும் வழங்கப்பட்டது.
இதுமட்டுமல்லாது 11 சிக்ஸர்கள் அடித்துள்ள ஸ்மிருதி மந்தனா, மகளிர் சூப்பர் லீக் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.