• Download mobile app
08 Feb 2025, SaturdayEdition - 3286
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மலம்புழா அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

August 3, 2018 தண்டோரா குழு

தமிழக கேரளா எல்லையோரம் அமைந்து உள்ள மலம்புழா அணை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியதால்,அணையில் இருந்த நான்கு மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

தமிழக கேரளா எல்லையோரம் மலம்புழா அணை அமைந்துள்ளது.கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இந்த அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இந்த அணையின் முழு கொள்ளளவான 150 மீட்டர் அளவை எட்டியதும்,இந்த அணையை கேரளா பொதுப்பணித் துறை அதிகாரிகள் திறந்தனர்.இந்த அணையில் உள்ள நான்கு ஷட்டர்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

ஒவ்வொரு ஷட்டர்களும் வழியாக மெதுவாக தண்ணீர் திறக்கப்பட்ட காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.மேலும் இரவு நேரங்களில் கலர் மின்விளக்கு அலங்காரங்களுடன் ரம்மியமாக அணை காட்சியளித்தது.

இந்த அணை திறக்கப்பட்டதால் மலம்புழா,புதுப்பெரியாரம்,கத்தே துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேலும் அணை நிரம்பியதால் அப்பகுதியில் உள்ள விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்கும் அதிகளவில் பயன்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க