August 10, 2018
தண்டோரா குழு
காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி, அதிதி ராவ், அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் எனமிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது.இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து திரைக்கு விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இதற்கிடையில், மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.இந்நிலையில், தற்போது, ‘செக்கச் சிவந்த வானம்’ படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.