August 30, 2018
தண்டோரா குழு
நடிகர் பிரபுதேவா ‘லட்சுமி’ படத்தை அடுத்து தயாரிப்பளார் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘தூத்துக்குடி,’ ‘மதுரை சம்பவம்’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார் இப்படத்திற்கு கதை–திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார்.
நடிகர் சூர்யா,கார்த்தி ஆகிய இருவரை வைத்தே படங்களை தயாரித்து வந்த ஞானவேல்ராஜா முதல் முறையாக ஆர்யாவை வைத்து,‘கஜினிகாந்த்’ படத்தை தயாரித்தார்.இதனைதொடர்ந்து பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்.அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில், உணர்வுப்பூர்வமான ஒரு அதிரடி படமாக உருவாகும் இப்படத்திற்கு “தேள்” என பெயர் வைத்து உள்ளனர்.