• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

September 3, 2018 தண்டோரா குழு

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில்,இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்று,தொடரை 3-1 என கைப்பற்றியது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்தாம்டனில் நடந்தது.இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்கள்,இந்தியா 273 ரன்கள் எடுத்தது.இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி,271 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இந்திய அணிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் களமிறக்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் (17),ராகுல் (0),புஜாரா (5) என சொற்ப ரன்களில் வெளியேறினர்.இதனால் இந்தியா 22 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.4-வது விக்கெட்டுக்கு கோலி உடன் ரகானே ஜோடி சேர்ந்தார்.இருவரும் வழக்கம் போல நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இந்நிலையில் கோலி (58) ரன்களிலும்,அரைசதம் அடித்து கைகொடுத்த ரகானே (51) வெளியேற,போட்டி இங்கிலாந்து அணி பக்கமாக திரும்பியது.

பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி 69.4 ஓவர்கள் முடிவில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இதன் மூலம் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மேலும் படிக்க