• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நகை, வெள்ளி மற்றும் பணம் கொள்ளை

August 26, 2016 தண்டோரா குழு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர். மளிகைக் கடை வைத்து இருக்கும் இவர் நேற்று விடுமுறை என்பதால் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர்.

பின்னர் காலை திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அதில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட தலைவாசல் காவல் துறையினர் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும் படிக்க