September 17, 2018
தண்டோரா குழு
தமிழில் பிரகாஷ் ராஜ் நடித்த தோனி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே.அதன்பின் கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா,ரஜினியுடன் கபாலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் தற்போது முன்னணி நாயகியாக உருவெடுத்துள்ள இவர் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.இந்நிலையில்,ராதிகா ஆப்தே தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது.இதனால் கடுமையான வலியால் துடித்த ராதிகாவிடம்,படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவருடன் சேர்ந்து நடித்த நடிகர் ஹோட்டலில் எல்லைமீற முயற்சித்துள்ளார்.
இதையடுத்து, ராதிகா ஆப்தே இதனை வெளிப்படையாக ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.மேலும்,ஹாலிவுட் பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே சொல்கிறார்கள்.ஆனால்,பாலிவுட்டில் உள்ளவர்களுக்கு இன்னும் அந்த துணிச்சல் வரவில்லை என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.