• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காங். தொகுதிப் பங்கீட்டு குழு இன்று அல்லது நாளை அறிவிப்பு: ஈவிகேஎஸ் இளங்கோவன்.

March 19, 2016 tamil.oneindia.com

காங்கிரஸ் கட்சியின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கான குழு இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என்று தமிழக காங். கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது.

திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவது குறித்து கட்சி தலைமையிடம் பேசுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவன் டெல்லி சென்றார். பின்னர் சென்னை வந்த அவருக்கு அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நேற்று வீடு திரும்பினார். இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கான குழுவை காங்கிரஸ் மேலிடம் இன்று அல்லது நாளை அறிவிக்கும். அதனைத் தொடர்ந்து ஓரிரு நாளில் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றார்.

மேலும் படிக்க