• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூர் அருகே கேபிள் வயர் சரி செய்தவர்கள் மீது ரயில் மோதி விபத்து. மூவர் பலி

August 29, 2016 தண்டோரா குழு

திருப்பூர், ஊத்துகுளி சாலையில் உள்ள முதல் ரயில்வே கேட் பகுதியில், உள்ள ரயில் பாதையை கடந்து செல்லும் கேபிள் ஒயரில் பழுது ஏற்பட்டதை அடுத்து அதைச் சரி செய்யும் பணியில், சடையன், சின்னசாமி மற்றும் ராமலிங்கம் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ரயில் இரும்புப் பாதையில் இருந்த அவர்கள் மீது, ஈரோட்டில் இருந்து வந்த ரயில் மோதியது. இதில் சடையன் மற்றும் சின்னசாமி ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்.

ராமலிங்கம் என்பவர் படுகாயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். அது குறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க