• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“சர்கார் படத்தின் கதை,திரைக்கதை, வசனம் என்னுடையது தான்” – இயக்குநர் முருகதாஸ்

October 30, 2018 தண்டோரா குழு

“சர்க்கார் திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ் அதில் எந்த மாற்றமுமில்லைஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.

மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு, பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘சர்கார்’ படத்தின் கதை, தன்னுடைய ‘செங்கோல்’ கதையில் இருந்து திருடப்பட்டது என்று உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையில், சர்கார் கதையும் செங்கோல் ஓன்று தான் என எழுத்தாளர் சங்கத் தலைவரான இயக்குநர் கே.பாக்யராஜ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து, இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் சன் பிக்சர்ஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார். படத்திற்கான கதை என்று டைட்டில் கார்டில் நன்றி ராஜேந்திரன் என்று குறிப்பிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு படத்தை வெளியிட தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் , இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்,

வழக்கம்போல் நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. இயக்குநர் பாக்கியராஜ் என்னை அழைத்து நிறைய பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கிறது. ஒருவரின் ஓட்டை கள்ளஓட்டு போட்டுவிட்டார்கள் என்பது போன்ற கதையை உதவி இயக்குநர் ஒருவர் பதிவு செய்துள்ளார். இது தான் படத்தின் மையக்கரு
அந்த ஓன்று தான் மற்றபடி சர்கார் கதைக்கும் செங்கோல் என்ற கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், உங்களுக்கு முன்னாடியே அவர் பதிவு செய்துள்ளதால் அவரை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் படத்தின் துவக்கத்தில் ஒரு டைட்டில் கார்டு போடும்படி கேட்டுகொண்டார். அதற்கு நான் ஒப்புக்கொண்டேன். அவ்வளவு தான். மற்றபடி ”செங்கோல் கதைக்கும், சர்கார் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… சர்கார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஏ.ஆர். முருகதாஸ் மட்டுமே”. ஹாப்பி தீபாவளி எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க