November 13, 2018
தண்டோரா குழு
கன்னடத்தில் வாசு என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அஜித் வாசன்,தற்போது கண் இமைக்கும் நேரத்தில் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.நள்ளிரவு 1 மணி முதல் 4 மணி வரை நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஆக்ஷன் திரில்லராக எடுக்கப்பட்டு வரும் இப்படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.புதுமுகங்கள் பலரும் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தை அஜித் வாசனுடன் நடிகர் நரேனும் இணைந்து தயாரிக்கிறார்.இதன் மூலம் அவர் முதன் முறையாக தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது.இதனை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.