November 26, 2018
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்றழைக்கப்படுபவர் இயக்குனர் கே.பாலச்சந்தர்.இவர்,கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி உயிரிழந்தார்.இவரது மனைவி ராஜம் (84).வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில்,சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு காலமானார்.இவருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும், பிரசன்னா என்ற மகனும் இருக்கின்றனர்.இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும்.இவரது மரணத்திற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.