• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காதலரை கரம்பிடித்தார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் !

December 14, 2018 தண்டோரா குழு

பேட்மிண்டன் வீரர்கள் கஷ்யப் ,சாய்னா நேவால் இன்று திருமணம் செய்து கொண்டனர்.

இந்தியாவின் பிரபல பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், ஒலிம்பிக், காமென் வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். ஐதராபாத்தை சேர்ந்த 28 வயதான சாய்னா நேவால், சக பேட்மிண்டன் வீரரும் ஐதராபாத்தை சேர்ந்தவருமான 32 வயது பாருபள்ளி காஷ்யப்பை காதலித்து வந்தார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மலர்ந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது.

இதையடுத்து, டிசம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அதைபோல் டிசம்பர் 20-ம் தேதியிலிருந்து ப்ரீமியர் பேட்மின்டன் லீக் தொடங்க இருப்பதால், சாய்னா – காஷ்யப் பிஸியாகிவிடுவர். எனவே, டிசம்பர் 16-ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பேட்மிண்டன் வீரர்கள் கஷ்யப் ,சாய்னா நேவால் இன்று திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க