• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிசிசிஐயின் புதிய செயலாளர் மற்றும் தேர்வுகுழு தலைவர் அறிவிப்பு

September 21, 2016 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 87-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.

இந்த பொதுகுழுக் கூட்டத்தில் இடைக்காலமாக நியமனம் செய்யப்பட்ட செயலாளர் அஜய்ஷிர்கே, இந்த கூட்டத்தின்போது மீண்டும் முறைப்படி செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் இந்திய வீரர் எம்.எஸ்.கே பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இன்று மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான இவர்,முன்னாள் தேர்வுக்குழுத் தலைவரான சந்தீப் பாட்டீலுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஐந்து பேர் கொண்ட மூத்த தேர்வுக்குழுவில் இவர் தெற்கு மண்டலத்தின் பிரதிநிதியாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய அணிக்காக ஆறு டெஸ்ட் மற்றும் 17 ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க