• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி

September 23, 2016 தண்டோரா குழு

முதல்வர் ஜெயலலிதா,திடீரென உடல்நலக்குறைவால் நேற்று இரவு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக நேற்று இரவு, 11:30 மணியளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்குள்ள, சிறப்பு சிகிச்சை பிரிவில், டாக்டர்கள் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்தனர்.மூத்த டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினரால், முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தற்போது அவர் நலமாக உள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதால், அமைச்சர்கள் ,அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.

மேலும் படிக்க