• Download mobile app
10 Apr 2025, ThursdayEdition - 3347
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அந்தக் காதலன் யார் என்று எனக்கும் சொல்லுங்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ் டுவீட்

May 11, 2019 தண்டோரா குழு

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழில் விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படத்திலும் நடித்திருந்தார்.

துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல், கருப்பர் நகரம், எஸ்கே 16, மெய் என தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். கனா படத்தின் வெற்றியை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு கனா ரீமேக்கில் நடித்து வருகிறார். நடிப்பில் பிஸியாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் திரையுலகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் வதந்திகள் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் பரவின. இந்நிலையில் தன்னுடைய திருமணம் தொடர்பாக செய்திக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது தொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டரில்,

“மக்களே, நான் எனது காதல் கதை பற்றி வதந்திகள் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அந்தக் காதலன் யார் என்று எனக்கும் சொல்லுங்கள். தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இப்படியான பொய் செய்திகளைப் பரப்புவதை தயவுசெய்து நிறுத்துங்கள். அப்படி ஏதாவது நடந்தால் உங்களுக்கு அதைச் சொல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். நான் தனியாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க