இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவத்தின் பாரசூட் ரெஜிமென்டில் இணைந்து 2 மாத பயிற்சியை இன்று துவங்கினார்.
இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பைப் போட்டியில் தோனியின் பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில், தோனி கிரிக்கெட் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு எந்த கருத்தும் கூறவில்லை. இதற்கிடையில்,வரும் ஆகஸ்ட் மாதம் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் தோனி தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது. அப்போது, தோனி தாமாக முன்வந்து தொடரில் இருந்து விலகினார். மேலும் தான் ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற இருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து இந்திய ராணுவ பாரசூட் ரெஜிமென்டில் தோனி லெப்டினென்ட் அந்தஸ்தில் பதவி வகித்து வருகிறார். அவ்வப்போது ராணுவத்தில் சேர்ந்து தோனி பயிற்சி பெற்று வருகிறார். இதற்கிடையே ராணுவ பாரசூட் ரெஜிமென்டின் அசைவுக்காக காத்திருந்த தோனிக்கு, கடந்த வாரம் ராணுவத்தில் இருந்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று தோனி 106 பாரா டிஏ பாரசூட் ரெஜிமென்டில் முறைப்படி சேர்ந்துள்ளார். ஜூலை 31 முதல், ஆகஸ்ட் 15-அம் தேதிவரை பயிற்சிக்கான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தர்ட் ஐ அமைப்பின் ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்ட நடிகை கெளதமி
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்
கோவையில் சூயஸ் இந்தியா சார்பில் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம்