• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

85 வயதில் ஓய்வு அறிவிப்பு – அனைவரயும் ஆச்சரியப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர்!

August 28, 2019 தண்டோரா குழு

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் செசில் ரைட் அறிவித்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

செசில் ரைட் இரண்டு வாரத்தில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறஉள்ளதாக அறிவித்துள்ளார். இது ஆச்சரியப்ப்படவேண்டிய விஷயம் அவருக்கு வயது 85. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் விவியன் ரிசர்ட்ஸ், கேரி சோபர்ஸ் போன்றவர்களின் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறாமல் இருக்கலாம். ஆனால் நீண்ட நாட்கள் விளையாடிய வீரர் என்ற பெருமையை செசில் பெற்றுள்ளார்.

இவர் முதன்முதலாக ஜமைக்கா அணி சார்பில் பார்படோஸ் அணிக்கு எதிராககளமிறங்கினார். விவியன் ரிசட்ர்ஸ் விளையாடிய அணியில் இவர் இடம்பெற்றிருக்கிறார். செசில் 60 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 7000 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக விளையாடி வருபவர் செசில், அவரது மனஉறுதியும், உடல்திறனும் மற்ற வீரர்களுக்கு முன்உதாரணமாக இருக்கும் என முன்னாள் வீரர்கள் பலர் செசிலின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க