• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தீக்குளித்த இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த் சிகிச்சை பலனின்றி பலி

October 8, 2016 தண்டோரா குழு

கோவை போத்தனூரில் கடந்த 3 ந் தேதி தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்ற இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த செப் 22ம் தேதி கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது இறுதி ஊர்வலத்தின் போது பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. வன்முறையில் ஈடுபட்டதாக காவல் துறையினர் 800 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குபதிவு செய்து பலரை கைது செய்தனர். தற்போது, சசிக்குமார் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்காக தேடியும் வருகின்றனர்.

இந்நிலையில் , கடந்த 3ம் தேதி இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த்குமார் என்பவர் போத்தனூரில் உள்ள தனது வீட்டில் திடீரென தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். செப் 23ல் இந்துமுன்னணி சசிக்குமார் கொலையை அடுத்து வன்முறையில் ஈடுபட்டதற்காக காவல்துறையினர் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தற்கொலைக்கு அவர் முயற்சித்ததாக கூறப்பட்டது.

இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த்குமார் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆனந்த குமார் சகோதரர் ரஞ்சித்குமார் நேற்று தற்கொலைக்கு முயன்று அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க