• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு மருத்துவமனை அருகே சாலையில் ஓடும் சாக்கடை நீர்

November 29, 2016 தண்டோரா குழு

கோவை அரசு பொது மருத்துவமனை வெளிப்புற பகுதியில் அரசு கலைக்கல்லூரி செல்லும் சாலையில் உள்ள சாக்கடையில் கால்வாய் அடைப்பின் காரணமாக துர்நாற்றத்துடன் கழிவுநீர் சாலையின் ஓரத்தில் கசிகிறது.

கோவை அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். மருத்துவமனையின் பின்புறத்தில் கோவை அரசு கலை கல்லூரி அமைத்துள்ளது.

மருத்துவமனை வெளிப்புறப் பகுதியில் இருந்து அரசு கலைக்கல்லூரி செல்லும் சாலையில் உள்ள சாக்கடையில் கால்வாய் அடைப்பின் காரணமாக துர்நாற்றத்துடன் கழிவுநீர் சாலையின் ஓரத்தில் கசிந்து செல்கிறது. இதனால், மருத்துவமனை வளாகத்தின் அருகே சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.

இதைத் தற்காலிகமாக அடைத்து வைத்துள்ளனர். ஆனால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகியுள்ளது. எனவே, மருத்துவமனை அருகே நோய் பரவும் சூழல் உள்ளதால், இதனை விரைந்து சரிசெய்ய வேண்டும் என மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க