• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிசம்பர் 2 ம் தேதி முதல் தமிழகத்தில் மழை

November 30, 2016 தண்டோரா குழு

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலால் டிசம்பர் 2ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. அது வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிக்கு வரும். அப்படி வரும் போது நவம்பர் 30 முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று செவ்வாய்க்கிழமை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புதன்கிழமை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
“அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும். புயலுக்கு நாடா புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

நாடா புயல் கடலூருக்கு அருகே கரையைக் கடக்கும். புதுச்சேரிக்கு அருகே தென்கிழக்கே வங்கக் கடலில் 730 கி.மீ அருகே புயல் மையம் கொண்டுள்ளது.

இதன் விளைவாக, டிசம்பர் 2ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க