• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சோ மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல்

December 7, 2016 தண்டோரா குழு

மறைந்த மூத்த பத்திரிகையாளர் “சோ” எஸ். ராமசாமியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி “டுவிட்டரில்” இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாடக, திரைப்பட நடிகரும், “துக்ளக்” பத்திரிகை ஆசிரியருமான “சோ” உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் புதனன்று (டிசம்பர் 7) அதிகாலையில் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சோ சிறந்த தேசியவாதி. அச்சமின்றி பேசக்கூடியவர். பன்முகத் தன்மை கொண்டவர். வெளிப்படை தன்மையுடன் பேசக் கூடியவர். சிறந்த அறிவாளி. எல்லாவற்றிற்கும் மேல் அவர் எனது நெருங்கிய நண்பர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சோவைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் துக்ளக் வாசகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க