• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஊழலை ஒழிக்க 2 புதிய செயலிகள் கேரளத்தில் அறிமுகம்

December 10, 2016 தண்டோரா குழு

கேரள மாநிலத்தில் ஊழலை ஒழிக்கும் வகையில் 2 புதிய செயலிகளை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிமுகம் செய்து வைத்தார்.

திருவனந்தபுரத்தில் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் அரைஸிங் கேரளா’ (Arising Kerala), விசில் நவ் (Whistle Now) என்று பெயரிடப்பட்டுள்ள செயலிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

விழாவில் பினராயி விஜயன் பேசியதாவது:

“ஊழலற்ற மற்றும் நிலையான வளர்ச்சி என்பதே மாநில அரசின் நோக்கம். அதைக் கருத்தில் கொண்டு, அரசு நிர்வாகம், அமைப்புகளில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகப் பல்வேறு திட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் செயலிகள் மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் லஞ்சம், ஊழல் தொடர்பான சம்பவங்களை விடியோ, ஆடியோ மூலம் பதிவேற்றம் செய்ய முடியும். ஊழலை ஒழிப்பது தொடர்பான ஆலோசனைகளை கேரள மக்கள் இந்த செயலிகள் மூலம் வழங்கலாம்”.இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

மேலும் படிக்க