• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீயானுக்காக வருந்தும் திரையுலக பிரபலங்கள்.

March 29, 2016 வினித்ராஜா .க

63-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஐ’ படத்துக்காக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விக்ரமுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் பலர் தங்களது எதிர்ப்புகளைச் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

அவர்களுடன் இணைந்து ஐ படத்தின் ஒளிப்பதிவாளரும் தனது எதிர்ப்பினை டிவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, “தேசிய விருதுகள் பல சமயத்தில் அதன் நோக்கத்தை இழந்துவிடுகிறது. இது விக்ரமுக்கு கிடைத்த இழப்பு அல்ல. தேசிய விருதுகளுக்கான இழப்பு” என்றார்.

அதுமட்டுமின்றி விசாரணை படத்தை இயக்கிய வெற்றிமாறன் மற்றும் ஐ படத்தில் நடித்த விக்ரம் ஆகியோருக்கு விருது கிடைக்காதது தனக்கு வருத்தமளிப்பதாக சமுத்திரக்கனி கூறியுள்ளார்.

மேலும் ஐ படத்துக்காக விக்ரம் கொடுத்த உழைப்பு வார்த்தைகளால் சொல்லமுடியாதது என்றும் அவர் கூறியுள்ளார். விசாரணை படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை சமுத்திரக்கனி பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க