• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீலாது நபி விழா: இஸ்லாமிய மக்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி வாழ்த்து

December 12, 2016 தண்டோரா குழு

முகமது நபியின் பிறந்த தினமான மிலாது நபி வாழ்த்துகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முகமது நபியின் பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை(டிசம்பர் 13) கொண்டாப்படுகிறது. அவருடைய பிறந்த நாளை மிலாத்-ன்-நபி என்று உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் மிலாத்-ன்-நபி விழாவிற்கு இந்திய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் ,நரேந்திர மோடி இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஜனாதிபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்தில் கூறியிருப்பதாவது:

உலக சகோதரத்துவம், இரக்கம், கருணை, சகிப்புத்தன்மை மற்றும் நல்வாழ்க்கை ஆகியவற்றை நோக்கி வேலை செய்ய நபிகளின் செய்திகள் நமக்கு ஊக்கத்தை அளிகிறது. இந்த நன்நாளில் நபிகளின் வாழ்கையை மற்றும் கொள்கைகளை நினைவில் கொண்டு மனித சேவைக்கு நம்மை முழுவதுமாக சமர்ப்பிப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

மிலாது நபி வாழ்த்துக்கள். இந்த நாளில் நம்முடைய சமுதாயத்தில் ஒற்றுமை, அமைதி மற்றும் சுபிட்சம் எப்போதும் காணப்படட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க