• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்பு

February 1, 2022 தண்டோரா குழு

கோவையில் சில நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதாக குழந்தைகள் நல திட்ட அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

அதனடிப்படையில், கோவை ஆட்சியர் அலுவலக திட்ட அதிகாரி பிஜூ அலெக்ஸ் தலைமையில் நேற்று சலீவன் தெருவில் உள்ள அப்பாஸ் என்பவரது டையிங் நிறுவனத்தில் சோதனை செய்தனர்.அப்போது அங்கு வடமாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் 2 பேரை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் குழந்தை தொழிலாளர்கள் 2 பேரை மீட்டனர்.

இது தொடர்பாக வெறைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில்,போலீசார் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய டையிங் நிறுவன உரிமையாளர் அப்பாஸ் உதித் ஷேக் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வபுரத்தில் உள்ள ஸ்வீட் கடையில் குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க