• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்

February 5, 2022 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஷாலினி (23), நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு நேற்று மாலை வீட்டில் இருக்கும்போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 108 ஆம்புலன்சு வரவழைத்து கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, செட்டி வீதி அருகே சென்றபோது, ஷாலினிக்கு வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே வந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் அருள்குமார் ஆம்புலன்சை டவுன்ஹால் பகுதியில் நிறுத்தி பைலட் ஜிவின் உதவியுடன் பிரசவம் பார்த்தனர். இதில், ஷாலினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் தாய், சேய் இருவரையும் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க